Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராணி முகர்ஜியின் பரம ரகசியத்தை அம்பலப்படுத்திய சத்ருகன் சின்ஹா
மும்பையில் அண்மையில் மறைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ராவின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் யாஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா, மகன் உதய் சோப்ரா உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். சிலையை பமீலா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ராணி முகர்ஜியும் கலந்து கொண்டார்.
ராணியும், யாஷ் சோப்ராவின் மூத்த மகனான ஆதித்யா சோப்ராவும் கடந்த ஆண்டே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கிசுகிசுக்கப்ப்டடு வருகிறது. இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பேசிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா, பமீலா சோப்ரா, உதய், ராணி மற்றும் குடும்பத்தார்... ஆதித்யாவின் பெயரை விட்டுவிட்டேன் என்று என் மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரை சொன்னால் அது ஆதித்யாவை குறிக்கும் என்றார்.
இதைக் கேட்ட ராணி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார். எல்லோரும் கிசுகிசுத்துக் கொண்டிருக்கையில் சத்ருகன் சின்ஹா இப்படி ராணி சோப்ரா என்ற பொது இடத்தில் கூறியது அவர்களின் ரகசிய திருமணத்தை உறுதி செய்வது போல் உள்ளது.