Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ராஜ்யஸ்ரீ நகையை மீட்டது போல எனது ரூ 37 லட்சம் நகைகளையும் மீட்டுக் கொடுங்க! - நடிகை ஷீலா
மூத்த நடிகை ராஜ்யஸ்ரீயின் நகைகளை மீட்டுத் தந்தது போல, களவு போன எனது ரூ 37 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் போலீசார் மீட்டுத் தர வேண்டும் என்று பழம்பெரும் நடிகை ஷீலா கோரிக்கை விடுத்துள்ளார்.
தி நகரில் நகைக்கடையில் இருந்து நடிகை ராஜ்யஸ்ரீயிடமிருந்து ரூ 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒரு நபர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான். உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் செய்தார் ராஜ்யஸ்ரீ. புகார் செய்த இரண்டு நாட்களில் கொள்ளைக்காரனைப் பிடித்த போலீஸ், நகைகள் அனைத்தையும் மீட்டது.
இந்த விஷயம் கேள்விப்பட்ட நடிகை ஷீலா, தன் வீட்டிலும் ரூ 37 லட்சம் நகைகள் களவு போனதாகவும் அதையும் போலீசார் மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ராஜ்யஸ்ரீயின் நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டுக் கொடுத்ததை அறிந்து மகிழ்ந்தேன்.
என் வீட்டிலும் என் படுக்கை அறையில் வைத்திருந்து ரூ 37 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டனர்.
ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது, நான் அவரை சந்தித்து எனது வீட்டில் திருட்டு நடந்தது பற்றி புகார் கொடுத்தேன். உடனே அவர் வழக்கு போடச்சொல்லி உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு செய்து, தினமும் போலீசார் என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் நகைகள் கிடைக்கவில்லை.
என் வீட்டில் நடந்த திருட்டு பற்றி மீடியாவில் பெரிதாக செய்தி வரவில்லை. போலீசார் கண்டுபிடித்துத் தருவார்கள் என்பதால் நானும் அமைதியாக இருந்தேன்.
போலீசார் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நான் கஷ்டப்பட்ட சம்பாதித்த நகைகள் இவை. பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறேன்," என்றார்.