Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவில் உதவிய நடிகைக்கு திடீர் பக்கவாதம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு தன்னார்வலராக பணியாற்றிய நடிகை ஷிகாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஷிகா மல்ஹோத்ரா, இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
பிரபல இயக்குனருக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

தன்னார்வ நர்ஸ்
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவ மற்றும் சிகிச்சை அளிக்க தன்னார்வலராக பலர் பணியாற்ற முன் வந்தனர். அதில் ஒருவர் ஷிகா. மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக இணைந்தார்.

அம்மாவும் நர்ஸ்
நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்த ஷிகா, பின்னர் நடிகையானார். இவர் அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த நடிகை ஷிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதிப்பிட வேண்டாம்
இதுபற்றி சோசியல் மீடியாவில் கூறிய அவர், கடந்த 6 மாதமாக உங்கள் ஆசியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்தத் தொற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற அவர் அதற்காக சிகிச்சை பெற்றார்.

திடீர் பக்கவாதம்
பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்நிலையில், வீட்டில் இருந்த அவருக்கு கடந்த 10 ஆம் தேதி அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை விலே பார்லேயில் உள்ள ஹூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயல் இழப்பு
அவருடைய வலது கை உட்பட ஒரு பக்கம் செயலிழந்து விட்டதாகவும் அவரால் பேச முடியவில்லை என்றும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஷிகாவின் பி.ஆர் மானேஜர் அஸ்வினி சுக்லாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.