Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவில் உதவிய நடிகைக்கு திடீர் பக்கவாதம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு தன்னார்வலராக பணியாற்றிய நடிகை ஷிகாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஷிகா மல்ஹோத்ரா, இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
பிரபல இயக்குனருக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.
தன்னார்வ நர்ஸ்
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவ மற்றும் சிகிச்சை அளிக்க தன்னார்வலராக பலர் பணியாற்ற முன் வந்தனர். அதில் ஒருவர் ஷிகா. மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக இணைந்தார்.
அம்மாவும் நர்ஸ்
நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்த ஷிகா, பின்னர் நடிகையானார். இவர் அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த நடிகை ஷிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதிப்பிட வேண்டாம்
இதுபற்றி சோசியல் மீடியாவில் கூறிய அவர், கடந்த 6 மாதமாக உங்கள் ஆசியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்தத் தொற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற அவர் அதற்காக சிகிச்சை பெற்றார்.
திடீர் பக்கவாதம்
பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்நிலையில், வீட்டில் இருந்த அவருக்கு கடந்த 10 ஆம் தேதி அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை விலே பார்லேயில் உள்ள ஹூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செயல் இழப்பு
அவருடைய வலது கை உட்பட ஒரு பக்கம் செயலிழந்து விட்டதாகவும் அவரால் பேச முடியவில்லை என்றும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஷிகாவின் பி.ஆர் மானேஜர் அஸ்வினி சுக்லாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.