Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவான பிரபல நடிகை.. 5 ஆண்டுகள் முயற்சிக்கு வெற்றி!
சென்னை: வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பிரபல நடிகை.
நடிகை ஷில்பா ஷெட்டி, மாடலாக இருந்து திரைத்துறைக்கு அறிமுகமானவர். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் 1996ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியா படத்தில் நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்தார்.
இதன் மூலம் தமிழ்த்திரைத்துறைக்கு அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி. அதனை தொடர்ந்து குஷி படத்தில் மேக்கரீனா என்ற பாடலுக்கு நடிகர் விஜயுடன் இணைந்து நடனமாடினார்.
ஆண் நண்பரின் மேலே ஏறி அமர்ந்து.. மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ!
பிக்பிரதர்
தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த ஷில்பா ஷெட்டி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.
ஆண் குழந்தை
இந்த பிக்பிரதர் நிகழ்ச்சியை தழுவிதான் நம்ம ஊர் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு வியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
5 ஆண்டுகள் முயற்சி
மகனுக்கு தற்போது 8 வயதாகியுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இரண்டாவது குழந்தைக்கு முயற்சித்தனர். இந்நிலையில் வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கடந்த 15ஆம் தேதி பிறந்த இந்த பெண் குழந்தைக்கு சமிஷா ஷெட்டி குந்த்ரா என பெயரிட்டுள்ளனர்.
வேலைகள் ஓவர்
மகா சிவன் ராத்திரியை தேர்வு செய்து குழந்தை பிறந்திருப்பதாக ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் கூறியிருக்கின்றனர். குழந்தை ஃபிப்ரவரி மாதம் பிறக்கும் என தேதி கொடுக்கப்பட்டிருந்ததால் தானும் தனது கணவரும் இந்த மாதம் இருந்த அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.