Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா எல்லாம் எங்க லவ்வை தடுக்க முடியாது... கொரோனாவிற்கு சவால் விட்ட ஷில்பா
மும்பை : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யூடியூப் மற்றும் பல்வேறு விஷயங்களில் தன்னை மிகவும் பரபரப்பாக வைத்துக் கொண்டுள்ளார்.
அவரது கணவர் ராஜ் குந்த்ராவிற்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்
இந்நிலையில் ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
பரபரப்பான ஷில்பா
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய சினிமா கேரியரிலும் பின்பு படங்கள் குறைந்த போதும் தன்னை எப்போதும் பரபரப்பாகவும் தன்னுடைய சூழலை கலகலப்பாக வைத்துக் கொள்பவர். அவரின் யூடியூப் சேனல் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. அதில் யோகா, சமையல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
அறிவித்த ஷில்பா
மேலும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என அவர் எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்து கொள்கிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து டச்சில் இருந்து வருகிறார். படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி தனது கணவர் ராஜ் குந்த்ராவிற்கு கொரோனா பாதித்ததை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டார்.
தனிமைப்படுத்திய குடும்பத்தினர்
தொடர்ந்து தனது மாமனார், மாமியார், தாய், குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதையும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் ஆலோசனையின் படி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதையும் அவர் கூறினார்.
ராஜ் குந்த்ரா குவாரன்டைன்
ஆனால் ஷில்பா ஷெட்டிக்கு மட்டும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில், இந்த நெருக்கடியான நேரத்தில் சமூக வலைதள பதிவுகளில் இருந்து அவர் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் குவாரன்டைன் முடிவடையும் நிலையில் உள்ளதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காதல்
இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி கதவிற்கு இருபுறம் அவர்கள் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தும்வகையில் உள்ளது. மேலும் கொரோனா நேரத்தில் காதல் என்றும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் ஷில்பா.