twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது ரூ.8 லட்சம் மோசடி புகார்

    By Siva
    |

    Shilpa Shetty, Raj Kundra accused of fraud
    ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ஒருவர் ரூ.8 லட்சம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியின் புரமோட்டர் ஆனந்த் சிங். அவர் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் மீது பொது இடங்களில் புகைப்பிடப்பதாக புகார் கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் தொடர்ந்துள்ளார்.

    ஷில்பாவும் அவரது கணவரும் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தொடர்பாக தன்னிடம் இருந்து ரூ.8 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆனந்த் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

    English summary
    A local court of Jaipur has directed a complainant to depose before it on an allegation of fraud and cheating which he has brought against Rajasthan Royals' (RR) owners Shilpa Shetty and Raj Kundra for duping him of Rs 8 lakh in connection with a cricket talent hunt contest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X