அதிவேகமாக வந்து மோதிய கார்... மயிரிழையில் உயிர் தப்பிய ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
மும்பை: பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் பயங்கர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர்கள் இருவரும் ஜலந்தாரிலிருந்து மும்பைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது படுவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது கார் மீது மோதியுள்ளது.

சட்டென சுதாரித்துக் கொண்அ அதிர்ஷ்டவசமாக ஷில்பாவின் கார் பெரும் விபத்தில் சிக்கவில்லை. ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் காயமின்றி இந்த விபத்திலிருந்து தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக் குறித்து ஷில்பா கூறுகையில், நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், துர்கா தான் தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மாபியா கும்பலால் ராஜ் குந்த்ராவுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











