Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நண்பரே என்னை பலாத்காரம் செய்ய ஆள் ஏற்பாடு செய்தார்: சாக்ஷியின் தங்கை புகார்
மும்பை: நண்பரே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ஆளை ஏற்பாடு செய்ததாக நடிகை ஷில்பா ஷிவானந்த் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளவர் ஷில்பா ஷிவானந்த். அவர் தில் மில் கயே தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தான் மிகவும் பிரபலமானார். பின்னர் அவர் தனது பெயரை ஒஹானா ஷிவானந்த் என்று மாற்றிக் கொண்டார்.
சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துள்ள ஷில்பா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
ஷில்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மாமியார்
உங்களின் நெருங்கிய நண்பரே உங்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஆளை ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும்..உங்களின் சொந்த சகோதரியே உங்களை வீட்டை விட்டு விரட்ட நினைத்தால்...சகோதரியின் மாமியார் சொத்துக்காக உங்களையும், உங்களின் அம்மாவையும் கொலை செய்ய நினைத்தால்...
அம்மா
சில மாதங்களுக்கு முன்பு என் சகோதரியின் மாமியார் பாவனா மீது என் அம்மா கொலை வழக்கு தொடர்ந்தார். பாவனா தனது கணவரை கொலை செய்ததுடன் என்னையும், என் அம்மாவையும் கொலை செய்ய முயன்றார்...ஷோபா இந்தியாவில் இருந்தபோது அவரை கொலை செயதார்... மறுநாளே அவர் அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்... இந்திய போலீசாரை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே...கொலை வழக்கிற்காக நீங்கள் தேடப்படுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார் ஷில்பா.
ஃபேஸ்புக்
ஷில்பா தனது அக்காவின் மாமியார் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட போஸ்டுகளை நீக்கிவிட்டார். வேதம், புதையல், மாப்பிள்ளை கவுண்டர், வாஞ்சிநாதன், மானஸ்தன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சாக்ஷி சாகரின் தங்கை தான் இந்த ஷில்பா என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியா
ஷில்பா பரபரப்பான போஸ்ட் போட்டுவிட்டு நீக்கியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது குடும்ப விஷயம். மீடியாவுக்கு முன்பு பிரச்சனையை பெரிதாக்கவோ, யார் மனதையும் கஷ்டப்படுத்தவோ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.