twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாமே பொய்யா கோபால்.. ரொம்ப எதிர்பார்த்த ஷிவானி.. பெப்பே பெப்பே சொல்லி கிளம்பிய பாலாஜி!

    |

    சென்னை: தன்னிடம் இருந்து ஷிவானி அதிக அக்கறையை எதிர்பார்ப்பதை புரிந்துக்கொண்ட பாலாஜி இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

    Recommended Video

    கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே இத்தனை நாட்களாய் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது.

    இருவரும் காதலர்களை போலவே ஊட்டிவிடுவது, மசாஜ் செய்வது, ஒட்டி உரசி பேசுவது என ரொம்பவே நெருக்கமாக பழகினர்.

    அட கொடுமையே.. காதல் தோல்வியில் ஷிவானி பாடும் பாட்ட பாருங்க.. வைரலாகும் அன்சீன் புரமோ!அட கொடுமையே.. காதல் தோல்வியில் ஷிவானி பாடும் பாட்ட பாருங்க.. வைரலாகும் அன்சீன் புரமோ!

    கண்ணை மறைக்குது

    கண்ணை மறைக்குது

    இதனால் அவர்களுக்குள் காதல் உள்ளது என்று ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், பாலாஜியை நாமினேட் செய்த ஆரி, அவருக்கு காதல் கண்ணை மறைக்குது, ஆட்டத்தை விளையாட தவறுகிறார் என்றார்.

    லவ் வந்துச்சுன்னா சொல்றேன்

    லவ் வந்துச்சுன்னா சொல்றேன்

    இதனை நைசாக போட்டுவிட்டார் பிக்பாஸ். இதனால் கொதித்துப் போன பாலாஜி, இங்க யாரும் லவ் பண்ணல என்றும் யாரும் அப்படி பேச வேண்டாம் என்றும் எச்சரித்தார். மேலும் நான் உன்னிடம் ஃபிரண்ட்லியாதான் பேசுகிறேன், லவ் வராது வந்துச்சுன்னா சொல்கிறேன் என்று ஷிவானியிடம் கூறினார்.

    ஷிவானியின் கைகளை பிடித்து

    ஷிவானியின் கைகளை பிடித்து

    இதனாலேயே ஷிவானி அப்செட்டில் இருந்தார். பின்னர் பெட்டில் அமர்ந்து ஷிவானியின் கையை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆனால் சுச்சி பாடல் எழுதப்போவதாக கூறியதும் அவருடன் பிஸியானார்.

    ஈயாயடவில்லை

    ஈயாயடவில்லை

    இதனால் கடுப்பான ஷிவானி, அங்கிருந்து கிளம்பி விட்டார். கிட்சனில் வெங்காயம் நறுக்கிய அவரிடம் அர்ச்சனா, உனக்கும் பாலாஜிக்கும் சண்டைய என்று கேட்டார். அதற்கு இல்லை என்று கூறி முடித்துவிட்டார் ஷிவானி. ஆனால் அவரது முகத்தில் ஈயாயடவில்லை.

    என்னை கண்டுக்கவில்லை

    என்னை கண்டுக்கவில்லை

    தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஷிவானியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய பாலாஜி, சீரியஸாவே பேசிக்கொண்டிருக்கிறோமே ஃபன் பாட்டு எழுதலாம் என்று எழுதினேன் என்றார். நீங்க பாட்டு எழுதுனத பத்தி நான் எதுவும் சொல்லல ஆனா நீங்கள் என்னை கண்டுக்கவில்லை என்றார்.

    ரியாக்ட் பண்ணல

    ரியாக்ட் பண்ணல

    அதற்கு இவங்கள்லாம் இப்படி பேசுறாங்கன்னு நான் அவாய்ட் பண்ற ஆள் இல்ல என்றார் பாலாஜி. உடனே ஷிவானி, அவாய்ட் பண்ற இடத்தில் நான் இருக்க மாட்டேன். நீங்க தனியா இல்ல பிஸியா இருந்தீங்க. அதனால நான் பேசல. நான் போன பிறகும் நீங்க ரியாக்ட் பண்ணல.

    டிஸ்டர்ப் பண்ணல

    டிஸ்டர்ப் பண்ணல

    கையில் ரத்தம் வந்தது. அதை கழுவிட்டு வந்தேன். அப்போதும் நீங்கள் எதுவும் கேட்கவில்லை என்றார் ஷிவானி. அதற்கு ரத்தம் வந்துச்சா என்று அதிர்ச்சியான பாலாஜி, ஓ அப்போ அதுக்கூட தெரியாத என்ற ஷிவானி உங்களின் அக்கறையை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களை டிஸ்டர்ப் பண்ணல என்றார்.

    முகம் மாறிவிட்டது

    முகம் மாறிவிட்டது

    அதற்கு பதில் சொன்ன பாலாஜி, ஓகே நீ டிஸ்டர்ப் பண்ணாத, டிஸ்டர்ப் பண்ணுனன்னு நான் சொல்லல இனிமே டிஸ்டர்ப் பண்ணாத என்றார். பாலாஜியின் இந்த பதிலை கேட்டதும் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டது.

    அவ்வளவுதானா..

    அவ்வளவுதானா..

    இருந்த போதும் ஓகே என்றார் ஷிவானி. அதனை தொடர்ந்து இருவரும் அவரவர் பாததையில் நடக்க தொடங்கிவிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள், அவ்வளவுதானா, ஊட்டிவிட்டது, மாசாஜ் செய்தது எல்லாம் முடிந்துவிட்டதா என கேட்டு வருகின்றனர்.

    English summary
    Shivani and Balaji Separates in Biggboss house. They were too close in the house as lovers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X