அட கடவுளே.. பாவம்டா ஷிவானி செல்லம்.. இதயத்த உடைச்சீங்க.. இப்போ இப்படி பண்ணீட்டீங்களே.. கதறும் ஆர்மி!
சென்னை: ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷை கண்ணாடி ரூமுக்குள் அடைத்த பார்த்த அவர்களின் ஆர்மியினர் கதறியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க எதிலும் ஈடுபாடு காட்டாத இரண்டு பேரை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ்.
இதனை தொடர்ந்து யாரெல்லாம் ஈடுபாட்டோடு இல்லை என நடுவராக இருந்து வாக்கெடுப்பு நடத்தினார் அர்ச்சனா.

முதல் தேர்வு
ஏகப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக கொஞ்சம் கூட ஈடுபாடே இல்லை என முதலில் பாலாஜியையும் ஷிவானியையும் தேர்வு செய்தனர். ஆனால் பாலாஜி பல வேலைகளை செய்தார்.

மீண்டும் வாக்கெடுப்பு
அவரை ஈடுபாடு இல்லாத நபர் என கூற முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார் ரேகா. அதனை தொடர்ந்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தினார் அர்ச்சனா. அதில் ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷின் பெயர் முடிவு செய்யப்பட்டது.

அட பாவிகளா
இதனை தொடர்ந்து இருவரும் கார்டன் ஏரியாவில் இருந்த கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டனர். ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டது. கண்கள் கலங்கி கண்ணாடி அறைக்குள் சென்றார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அட பாவிகளா.. இப்படி செல்லத்த அழ விடுறீங்களே என கொதித்து விட்டனர்.
Recommended Video

வச்சு செய்வார்
கடந்த வாரம் உடைந்த இதயத்தை கொடுத்து செல்லக்குட்டியின் இதயத்தை குத்தி கிழித்தீர்கள் இம்முறை இப்படி ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறீர்களே என்றும் கதறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஷிவானி வெளியே வந்து உங்களை வச்சு செய்வார் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











