நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி..ஓடோடி வந்த பாலாஜி.. அம்மாவும் சமாதானம் ஆகிட்டாங்க போல!
சென்னை: ஷிவானியின் செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பார்ட்டியில் பாலாஜி பங்கேற்றார்.
பிரபல மாடலும் சீரியல் நடிகையுமான ஷிவானி நாராயணன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் 27 லட்சத்துக்கும் அதிகமான ஃபேன் ஃபாலோயிங்கை கொண்டுள்ள ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூடுதல் ரசிகர்களை பெற்றுள்ளார்.

பிறந்தநாள் விழா
சமூக வலைதளங்களில் எப்போதும் தனது க்யூட் மற்றும் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் ஷிவானி வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழா போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

முதல் பிறந்தநாள்..
அதாவது ஷிவானி தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார் ஷிவானி. வித விதமான கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

பாலாஜியுடன் நெருக்கம்
இதில் பிக் பாஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலாஜி, ஆஜித் ஆகியோர் பங்கேற்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி சக போட்டியாளரான பாலாஜியுடன் நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு ஊட்டி விடுவது, மசாஜ் செய்வது என அதிக கிசுகிசுகளுக்கு ஆளானார்.

கிழித்து விட்ட அகிலா
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா அகிலாவும் அவரை பாலாஜிக்கு ஆயா வேலை செய்யவா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தாய் என்று கேட்டு கிழித்து தொங்கவிட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது பாலாஜியை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை ஷிவானியின் அம்மா.

ஆன்ட்டி சமாதானமா?
இந்நிலையில் ஷிவானி நாய்க்குட்டியின் பிறந்தநாள் பார்ட்டியில் பாலாஜியும் ஆஜராகியிருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன பாலாஜி அகிலா ஆன்ட்டி சமாதானமாகி விட்டார்களா என்று கேட்டு லந்து கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











