அரை மணிநேரம் தேம்பித் தேம்பி அழுத ஜீவிதாவின் மகள்: காரணம் நம்ம தனுஷ் தான்!
சென்னை: 3 படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து தியேட்டரில் அரை மணிநேரமாக அழுததாக ஷிவானி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
அப்பா டாக்டர் ராஜசேகர், அம்மா ஜீவிதா வழியில் நடிக்க வருகிறார் ஷிவானி. ராஜசேகரின் மூத்த மகளான ஷிவானி மருத்துவம் பயின்று வருகிறார்.
அப்பாவை போன்று டாக்டர் தொழிலோடு சேர்த்து சினிமாவிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் ஷிவானி.

சினிமா
வாரிசு நடிகை என்பதால் சினிமாவில் எளிதில் நுழைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்கிறார் ஷிவானி ராஜசேகர்.

ஷிவானி
மருத்துவம் படித்தாலும் சினிமாவுக்கு வருவதற்காக நடனம், இசை என்று பல துறைகளில் பயிற்சி எடுத்து தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார் ஷிவானி.

தனுஷ்
தமிழில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரை ஷிவானிக்கு பிடிக்குமாம். அதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து ஷிவானி தியேட்டரில் அரை மணிநேரம் அழுதாராம்.

தமிழ்
ஆந்திராவில் வளர்ந்த பெண்ணாச்சே தமிழ் படத்தில் எப்படி தமிழ் பேசுவார் என்று நினைக்கலாம். வீட்டில் தமிழ் பேசுவதால் அம்மணி நம் மொழியில் சரளமாக பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











