Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிங்கப்பெண்ணாய் கண்ணீருடன் விடைபெற்ற ஷிவானி.. முதல் ஆளாய் கட்டியணைத்து கலங்கிய பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ஷிவானி நாராயணன்.
பிக்பாஸ் நிகழ்ச்சயின் கடைசி எவிக்ஷன் என்பதால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.
இதில் சோம் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்றதால் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றார்.
முதல் ஆளா பிளான் பண்ண வேண்டியதே நீங்கதான் ஷிவானி.. வெளியே போனா என்ன பண்ணுவீங்கன்னு கேட்ட கமல்!
மூன்று மகளிரில் ஒருவர்
அவரை தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்ட முதல் ஆளாக ஆரி தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இரண்டாவது நபராக பாலாஜி காப்பாற்றப்பட்டார். அவரை தொடர்ந்து ரியோவை காப்பாற்றிய கமல், மூன்று மகளிரில் ஒருவர் வெளியேறுவதாக கூறினார்.
அறிவித்த கமல்..
அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டார். ஷிவானியா கேபியா என்ற நிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் யார் இருக்க வேண்டும் என்று கேட்டார் கமல். அதற்கு ஹவுஸ் வாயே திறக்காததால் கடுப்பான கமல், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது எனக் கூறி ஷிவானியின் பெயரை அறிவித்தார்.
கட்டியணைத்த பாலாஜி
எவிக்ஷன் கார்டில் தனது பெயரை பார்த்ததுமே கண்கள் கலங்கினார் ஷிவானி. பின்னர் இதோ வருகிறேன் என்பதை போல் எழுந்து நின்றார் ஷிவானி. அவரை முதல் நபராக வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பாலாஜி.
மரியாதை வச்சுருக்கேன்
பின்னர் கேபி, ரம்யா, ஆரி, சோம், ரியோ என அனைவரும் கட்டியணைத்து அவருக்கு ஆறுதல் கூறினர். ஷிவானியிடம் பேசிய பாலாஜி, உன்னை நினைச்சு நான் பெருமை படுகிறேன் என்றார். மேலும் கனத்த இதயத்துடன் சொல்கிறேன் உன் மேல் நிறைய மரியாதை வச்சுருக்கேன் என்றார்.
சிங்கப் பெண் பாடல்
பின்னர் தனது உண்டியலை உடைத்து எல்லோருக்கும் காயின்களை பிரித்துக்கொடுத்தார் ஷிவானி. ஷிவானிக்கு சிங்கப்பெண்ணே பாடலை பாடி பிரியா விடை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். பிக்பாஸ் வீட்டில் பூத்த பூக்களையும் பறித்து கொடுத்து பரிசு அளித்தனர்.
பிக்பாஸ் ரைமிங்
அதனை தொடர்ந்து ரைமிங்காக இங்க உங்களுக்கு நடந்ததெல்லாம் டெஸ்ட்.. வெளியே நடக்கப் போறதுக்கு ஆல் த பெஸ்ட் என்று ஷிவானி ஸ்டைலில் கூறினார் பிக்பாஸ். இதனைக் கேட்டு ஹேப்பியான ஷிவானி, நன்றி கூறி கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாய் வெளியேறினார்.