Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரவுடி மாதிரி பண்ணாத.. பாலாவை பார்த்து ஜொள்ளு விடும் ஷிவானி.. 3வது புரமோவுல மீண்டும் ரொமான்ஸ்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
குண்டு ரோபோ என பாலா கிண்டல் பண்ணதால், கடுப்பாகி இருந்த ஷிவானி, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், மறுபடியும் பாலா பெட்டில் அமர்ந்து கொண்டு கொஞ்சி குழாவும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.
ரவுடி மாதிரி பண்ணாத என செல்லமாக ஷிவானி சொல்ல, நீயும் போயிட்டா என்ன பண்ணுவேன் என ஷிவானியை பேக் பண்ணி அனுப்பவே பாலா குறியாக இருக்கிறார்.
டார்கெட் ராஜா ஆரி
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ஆரியை அர்ச்சனாவின் வேல் கேங் திட்டம் போட்டு கவுப்பதற்கான வேலைகளை செய்து வருவதை காட்டினர். ரியோ ராஜ், ஆரியை போரிங் போட்டியாளர் என நாமினேட் பண்ண, அப்படி நீ என்னப்பா சுவாரஸ்யமா பண்ணி கிழிச்சிட்ட என ஆரி ஆர்மியினர் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆரி பக்கமே போக வேண்டாம் அவர் டஃப் என அர்ச்சனா பயந்து ஒதுங்கி தானே நிஷா, ஆஜீத் மற்றும் பாலாவை அவுட்டாக்கினார்கள்.
அர்ச்சனாவிடம் பம்முற
இரண்டாவது புரமோவில் ரியோவை அனிதா சீண்ட, உடனே நிஷா எகிறி வந்து சண்டை போடுகிறார். அப்பா மேட்டரை இழுத்த நிஷாவிடம் முறைத்துக் கொண்ட அர்ச்சனா, அதே அப்பா மேட்டரை வைத்துத்தானே நிஷாவை அவுட் ஆக்கினாங்க, அப்போ அதுக்கு நிஷா ஏன் அர்ச்சனாவிடம் எகிறாமல் அப்படி பம்முறாங்க, டீம் பிரிஞ்சாலும், அர்ச்சனா போட்ட அடித்தளம் கொஞ்சமும் அசையவில்லை. அடிச்ச விபூதி அப்படி!
யார் எக்கேடு கெட்டா
இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரமோவில் யார் எக்கேடு கெட்டு அடிச்சிட்டு செத்தா நமக்கென்ன, நாம தனியா ஷிவானியோடு வேர்க்கடலை சாப்பிடுவோம் என பாலாவும் ஷிவானியும் தனியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க.. என் பக்கம் அட்டென்ஷனை திருப்பு என பாலா, கெஞ்ச போடா என ஷிவானி சொல்வதும், போடி என பாலா கொஞ்சுவதுமாக 3வது புரமோ அமைந்துள்ளது.
ரவுடிசம்லாம் காட்டாத
ஷிவானியிடம் பாலா நேற்று கண் கலங்கி அழுத சீனை புரமோவில் காட்டி விட்டு நிகழ்ச்சியில் கட் பண்ணிட்டாங்க, அதே போல, ஷிவானியை குண்டு ரோபோ என பப்ளிக்கா பாலா கலாய்த்த நிலையில், அவரிடம் கோபித்துக் கொண்டு போன ஷிவானி இப்போ ரவுடிசம்லாம் இங்க காட்டாத என பாலாவை பார்த்து ஜொள்ளு விடுவது பார்க்கவே சகிக்கல..
பட்டம் கொடுத்துருப்பாங்க
சனம் இருந்தா உனக்கு அழகா பட்டம் கொடுத்துட்டே இருந்துருப்பாங்க, அவங்களும் போயிட்டாங்க, நீ பட்டம் கொடுக்க ஆள் இல்லாமல் ஓவரா ஆடிட்டு இருக்க என பாலாவை நல்லாவே வச்சு செய்துள்ளார் ஷிவானி. உடனே பாலா சொன்ன அந்த வார்த்தை ஷிவானியை ரொம்பவே கடுப்பேற்றியது.
நான் போவேன் நீ இருப்பியா
உடனே நீயும் போயிட்டா அதுக்கு கூட ஆளிருக்காதே என அடுத்து ஷிவானியை பேக் பண்ண பாலா துடித்துக் கொண்டிருப்பதை வெளிப்படையாக பேச, நான் போவேன் நீ இருப்பியா.. நீ வெளியே போனாலும், நான் இந்த வீட்டிலே இருந்து எனது ரசிகர்கள் ஆதரவால் டைட்டில் வின்னர் ஆகிடுவேன் என்கிற நினைப்பில் இருப்பது போல ஷிவானி பேசியதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.