Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து விட்டனர் சுரேஷ் சக்கரவர்த்தியை தவிர.. இன்றைய எபிசோடில் ஷிவானியும் வந்ததை முதல் புரமோவில் காட்டி உள்ளனர்.
கடந்த வாரம் ஷிவானி வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.
வந்த அவர், பாலாவை கண்டுக்காம அர்ச்சனாவை கட்டிப்பிடிக்கும் காட்சியை பார்த்து பாலா பல்பு வாங்கி உள்ளார்.
பாய்க்குள் பார்சல்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி உள்ளது. ஸ்டோர் ரூமில் சாப்பாடு வந்துள்ளது என நினைத்து சென்ற சுசித்ராவுக்கு, அங்கே இருந்த பாய்க்குள் ஷிவானி இருந்ததை கண்டு பயந்தே போய்விட்டார். பாய்க்குள் பார்சல் பண்ணி ஷிவானி நாராயணனை உள்ளே அனுப்பும் யோசனையை செய்தது யார் என்று தான் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ஹவுஸ்மேட்ஸ் ஹேப்பி
மீண்டும் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை அறிந்த ஹவுஸ்மேட்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, ஷிவானியை வழக்கம் போல கட்டிப்பிடித்து, வரவேற்றனர். எப்போதும் போல படுத்துக் கொண்டிருந்த பாலா, ஷிவானி என்று அறிந்ததும் துள்ளி குதித்து ஓடினார்.
பாலாவை மதிக்கல
பாலாவை பார்த்ததும் ஷிவானி கட்டிப்பிடித்து ஹேப்பி ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாலாஜி முருகதாஸை ஷிவானி கொஞ்சம் கூட மதிக்காமல், அவரை கிராஸ் பண்ணி அர்ச்சனா பக்கம் சென்றார். ஷிவானியை பார்த்ததும் அர்ச்சனா கட்டிப்பிடித்து வரவேற்றார்.
வீட்டில் பூஜையோ
ஷிவானி நாராயணன் ஏன் பாலாவை கண்டுக்காமல் கடந்து சென்றார் என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். ஒரு வேளை வீட்டுக்கு சென்ற அவருக்கு சரியான பூஜை இருந்திருக்குமோ, அம்மாவின் பேச்சை இப்போதாவது கேட்டு பாலாவுடன் பேசாமல் இருப்பாரா? இல்லை புரமோவுக்கு மட்டுமே இந்த கண்டு கொள்ளாத டிராமாவா என்பதை ஷோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
குவாரண்டைன்
ஷிவானி நாராயணன் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், 4 நாட்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஷிவானி நாராயணன் குவாரண்டைனில் இருந்தாரா? இல்லையா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
|
பொங்கல் கோலம்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே ஷிவானி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார், வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார் என சிலர் கூறி வந்தாலும், பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் ஷிவானி கோலம் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சந்தேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. பிக் பாஸ்ல ரூல்ஸ் எல்லாம் புக்ல மட்டும் தான் இருக்கும் போல!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!