twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து விட்டனர் சுரேஷ் சக்கரவர்த்தியை தவிர.. இன்றைய எபிசோடில் ஷிவானியும் வந்ததை முதல் புரமோவில் காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம் ஷிவானி வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

    வந்த அவர், பாலாவை கண்டுக்காம அர்ச்சனாவை கட்டிப்பிடிக்கும் காட்சியை பார்த்து பாலா பல்பு வாங்கி உள்ளார்.

    பாய்க்குள் பார்சல்

    பாய்க்குள் பார்சல்

    இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி உள்ளது. ஸ்டோர் ரூமில் சாப்பாடு வந்துள்ளது என நினைத்து சென்ற சுசித்ராவுக்கு, அங்கே இருந்த பாய்க்குள் ஷிவானி இருந்ததை கண்டு பயந்தே போய்விட்டார். பாய்க்குள் பார்சல் பண்ணி ஷிவானி நாராயணனை உள்ளே அனுப்பும் யோசனையை செய்தது யார் என்று தான் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

    ஹவுஸ்மேட்ஸ் ஹேப்பி

    ஹவுஸ்மேட்ஸ் ஹேப்பி

    மீண்டும் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை அறிந்த ஹவுஸ்மேட்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, ஷிவானியை வழக்கம் போல கட்டிப்பிடித்து, வரவேற்றனர். எப்போதும் போல படுத்துக் கொண்டிருந்த பாலா, ஷிவானி என்று அறிந்ததும் துள்ளி குதித்து ஓடினார்.

    பாலாவை மதிக்கல

    பாலாவை மதிக்கல

    பாலாவை பார்த்ததும் ஷிவானி கட்டிப்பிடித்து ஹேப்பி ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாலாஜி முருகதாஸை ஷிவானி கொஞ்சம் கூட மதிக்காமல், அவரை கிராஸ் பண்ணி அர்ச்சனா பக்கம் சென்றார். ஷிவானியை பார்த்ததும் அர்ச்சனா கட்டிப்பிடித்து வரவேற்றார்.

    வீட்டில் பூஜையோ

    வீட்டில் பூஜையோ

    ஷிவானி நாராயணன் ஏன் பாலாவை கண்டுக்காமல் கடந்து சென்றார் என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். ஒரு வேளை வீட்டுக்கு சென்ற அவருக்கு சரியான பூஜை இருந்திருக்குமோ, அம்மாவின் பேச்சை இப்போதாவது கேட்டு பாலாவுடன் பேசாமல் இருப்பாரா? இல்லை புரமோவுக்கு மட்டுமே இந்த கண்டு கொள்ளாத டிராமாவா என்பதை ஷோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

    குவாரண்டைன்

    குவாரண்டைன்

    ஷிவானி நாராயணன் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், 4 நாட்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஷிவானி நாராயணன் குவாரண்டைனில் இருந்தாரா? இல்லையா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    பொங்கல் கோலம்

    பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே ஷிவானி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார், வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார் என சிலர் கூறி வந்தாலும், பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் ஷிவானி கோலம் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சந்தேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. பிக் பாஸ்ல ரூல்ஸ் எல்லாம் புக்ல மட்டும் தான் இருக்கும் போல!

    English summary
    Shivani Narayanan re-enters into Bigg Boss house and avoid Balaji Murugadoss shown in today Bigg Boss promo 1.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X