தழைய தழைய பட்டுப் புடவையில் ஷிவானி நாராயணன்.. செம்ம க்யூட் என ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!
சென்னை: ஷிவானி நாராயணன் தழைய தழைய பட்டுப்புடவை கட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பாலாஜியுடன் மட்டும் நெருக்கமாக இருந்தாலும், சக போட்டியாளர்கள் குறித்து தரக்குறைவாக எதுவும் பேசாமல் ரொம்பவே மரியாதையாக நடந்து கொண்டார்.

மிக்சர் ஷிவானி
தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல், பின்னால் பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார் ஷிவானி. இதனால் பலரின் ஃபேவரைட் ஆனார். அதே நேரத்தில் சிலர் ஷிவானி நாராயணனை மிக்சர் என்றும் கலாய்த்து வந்தனர்.

ஆயா வேலை..
மேலும் பாலாஜியை எண்டெர்டெய்ன் செய்வது மட்டும்தான் ஷிவானியின் வேலை என்றும் விளாசி வந்தனர். ஷிவானி பிக்பாஸ் வீட்டில் செய்த வேலையெல்லாம் பார்த்த அவரது அம்மா, பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீயா என்று கேட்டு திட்டித் தீர்த்தார்.

குடும்ப குத்து விளக்காய்..
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஷிவானி நாராயணன் மீண்டும் தனது போட்டோக்களை ஷேர் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். வழக்கமாக கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்யும் ஷிவானி தற்போது, பட்டுப் புடவையில் குடும்ப குத்து விளக்காய் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்
மாம்பழ நிற பட்டுப்புடவையை தழைய தழைய கட்டி செமயாய் உள்ளார் ஷிவானி. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், லுக்கிங் நைஸ், செம்ம க்யூட், பியூட்டி ஃபுல் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











