Don't Miss!
- News பான் கார்டு இருக்குல்ல? பான் நம்பர் செயலிழந்துட்டால் இந்த 10 விஷயம் பண்ண முடியாது.. பான் அட்டை மேஜர்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஏன் டல்லா இருக்க.. உடம்பு சரியில்லையா.. இரண்டாவது புரமோவில் பாலாவுடன் பேருக்காக பேசிய ஷிவானி!
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த ஷிவானி நாராயணன், வந்த உடனே பாலாவை கண்டுக்கவே இல்லை.
Recommended Video
இந்நிலையில், இரண்டாவது புரமோவில் ஷிவானியிடம் பேசத் துடித்து அவர் முன் வந்து நின்ற பாலாவிடம் ஏதோ பேருக்காக பேச வேண்டும் என்பது போல ஷிவானி பேசியதே பாலாவை பங்கம் பண்ணியுள்ளது.
பாலா பற்றி வெளியே போனதும் ஷிவானிக்கு உண்மை புரிந்திருக்கும் என்பதே இதன் மூலம் தெரிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
சிங்கப்பெண்ணே
முதல் புரமோவில் ஷிவானியின் வித்தியாசமான என்ட்ரி காட்டப்பட்ட நிலையில், இரண்டாவது புரமோவில் சிங்கப்பெண்ணே என ஷிவானியை நடிகை ரேகா அழைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் இதயங்களை நொறுக்கி விட்டது என்ற ரேகா, ரொம்ப வலிச்சிருக்குமே என்றார், சனம் ஷெட்டியும் ஷிவானியை பாராட்டினார்.
பூனைக்குட்டி போல
முதல் புரமோவில் பாலாவை ஒதுக்கிவிட்டு அர்ச்சனா பக்கம் சென்ற ஷிவானி, இரண்டாவது புரமோவிலும் ரேகா, வேல்முருகன் மற்றும் சனம் ஷெட்டியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஷிவானியை பூனைக்குட்டி போல சுற்றி சுற்றி வந்து அவருக்கு முன் வந்து நின்று பேச முயன்றார் பாலா.
உடம்பு சரியில்லையா
பாலா தன் முன் வந்து நின்றதும் முன்பு போல அன்பு வழிய ஓடோடி சென்று கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டு அழுது புலம்பி கொஞ்சிக் கொள்ளாமல், ஏதோ பேருக்கு பேசுவது போல ஏன் டல்லா இருக்க? உடம்பு சரியில்லையா? என ஷிவானி நலம் விசாரித்த விதத்தை பார்த்த நெட்டிசன்கள் பாலாவின் சுயரூபத்தை ஷிவானி புரிந்து கொண்டார் போல அதான் இப்படி அவரை ஒதுக்குகிறார் என கலாய்த்து வருகின்றனர்.
திருப்பிக் கொண்டு
அப்படியெல்லாம் இல்லை.. ஐ எம் குட் என பாலா சொன்னதும், அடுத்த நொடியே அங்கிருந்து திருப்பிக் கொண்டு ஷிவானி நகர்ந்து செல்ல, எடிட்டர் என்ன பிஜிஎம் போடுவது என தெரியாமல், சோக பிஜிஎம்மை போட்டு இந்த புரமோவை ஓட்டி வருகிறார். என்னடா, இன்னைக்கு முழுவதும் பாலா ஷிவானி சீன் தான் போல என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.