Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் தந்தையைக் கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார்
சென்னை: என் தந்தை ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது பழிவாங்க முடிந்ததே என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனை மையமாகக்கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் ஒரு படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் ராஜ்குமாரின் நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.
இந்நிலையில் தனது அப்பாவைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த வீரப்பனை இந்தப் படத்தின் மூலமாவது என்னால் கொல்ல முடிந்ததே என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்ற சம்பவம் அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விஷயமாக இருந்தது.
இது குறித்து அவர் கூறும்போது "கில்லிங் வீரப்பன் படத்தில் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடம். இதில் ஹீரோயிசமோ, பஞ்ச் வசனங்களோ கிடையாது.
மேலும் இக்கதை பற்றி நான் விரிவான ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. இயக்குனர் ராம் கோபால் வர்மா சொன்னதைத் தான் படத்தில் நடித்துள்ளேன்.
என் தந்தை ராஜ்குமார் கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் எதுவும் இதில் விரிவாக சொல்லப்படவில்லை. ஆனால், எனக்கு தனிப்பட்ட திருப்தியை இந்த படம் தந்திருக்கிறது.
சினிமாவிலாவது வீரப்பனை என்னால் கொல்ல முடிந்தது மகிழ்ச்சி. இதன் மூலம் சினிமா பாணியிலான நியாயம் எனக்கு இதில் கிடைத்தது" என்று கூறியிருக்கிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!