Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் பிரியாணி சமைச்சுப் போடறேன், வந்து சாப்பிடுங்க.. அஜீத்துக்கு ஷோபா சந்திரசேகரன் அழைப்பு
சென்னை: தனது கையால் சமைத்த பிரியாணியை அஜீத் சாப்பிட வேண்டும் என விரும்புவதாக, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1 ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் தினத்தை அன்னதானம், ரத்ததானம், ஸ்பெஷல் ஷோ என்று அவரது ரசிகர்கள் போட்டிபோட்டு கொண்டாடினர்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தித் திரையுலகிலிருந்து ஏராளமான நடிக, நடிகையர் அஜீத்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஷோபா சந்திரசேகர் வாழ்த்தில் "நீங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்.
சண்டைக்காட்சிகள் அடிபட்டு நீங்கள் சிகிச்சை எடுப்பதைப் பார்க்கும்போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் நீங்கள் ஒரு நாள் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது கையால் சமைத்த பிரியாணியை சாப்பிட வேண்டும்'' என அஜீத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அம்மாவாக ஷோபா சந்திரசேகர் வைத்த கோரிக்கையை மகனாக அஜீத் நிறைவேற்றுவாரா? பார்க்கலாம்.