ஓரத்துல ஓரத்துல உக்காந்து பேசலாமா... ஷோபா சந்திரசேகரின் குத்துப் பாட்டு

By Sudha

விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு நல்ல கிளாசிகல் பாடகி என்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அவரால் குத்துப்பாட்டுக்கும் கோலாகலமாக பாட முடியும் என்பதை திரை ரசிகர்கள் அறிவர்.

தனது மகன் விஜய்யுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒருகுத்து்ப பாட்டுக்குப் பாடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு குத்துப் பாட்டுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார்.

தனது கணவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் உதவியாளரான எஸ்ஏசி ராம்கி இயக்கி வரும் இதயம் திரையரங்கம் படத்தில்தான் இந்தப் பாட்டைப் பாடியுள்ளார் ஷோபா. ஓரத்துல ஓரத்துல உக்காந்து பேசலாமா என்று தொடங்கும் இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடியிருப்பவர் நாட்டுப் புற பாடல்களில் பிரபலமாகி வரும் ஜெயமூர்த்தி ஆவார்.

வெஸ்டர்ன் மற்றும் நாட்டுப் புற வடிவம் இணைந்து இந்தக் குத்துப் பாட்டில் வெஸ்டர்ன் பீட்டை ஷோபாவும், நாட்டுப் புற பாடலை ஜெயமூர்த்தியும் பாடியுள்ளனர்.

தேனியில் இந்தப் பாடலை படமாக்கியுள்ளனராம். அப்பாடலுக்காக 100 தாத்தா, பாட்டிகளை கூட்டி வந்து ஆட வைத்து களேபரமாக ஷூட் செய்துள்ளாராம் ராம்கி. பாடலை எழுதியவர் விவேகா. மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.

ஒரு மெக்கானிக்குக்கும், பணக்காரப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைச் சொல்லும் படமாம் இது. தெலுங்கு நடிகர் ஆனந்த் நாயகனாகவும், ஷ்வேதா பாசு நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜூன் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X