Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதிர்ச்சி.. ரயில்வே தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளம் நடிகை ஜோதி ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் இளம் துணை நடிகை ரயில்வே தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மகர சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் இப்படியொரு எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஜோதி ரெட்டியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காணாமல் போன நடிகை... சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன ?
புஷ்பா படத்தில்
தெலுங்கு திரைப்படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தவர் ஜோதி ரெட்டி. சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் கூட இவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பாடல்களில் நடனமாடி உள்ளார். இந்நிலையில், இவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில்
26 வயதே ஆன இளம் துணை நடிகை ஜோதி ரெட்டி கடப்பா ரயில் நிலையத்தில் கடந்த திங்களன்று இரவு ரயில் ஏறி உள்ளார். ஹைதரபாத்திற்கு வர ரயில் ஏறிய இவர் செவ்வாயன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்க கலக்கத்தில் ஷாத் நகர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், இறங்கியதால் தவறி தண்டவாளத்தில் விழுந்து தலையில் பலத்த அடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் எனக் கூறப்படுகிறது.
உயிர் பிரிந்து விட்டது
கச்சிகுடா ரயில் நிலையம் என நினைத்துக் கொண்டு அவசரத்தில் அவர் இறங்கியது தான் இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறுகின்றனர். மேலும், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவர்களை அங்குள்ள மக்கள் பார்த்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறுகின்றனர்.
சிசிடிவி இல்லை
ஜோதி ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்த உறவினர்கள் உடலை வாங்க முதலில் மறுத்தனர். ரயில்வே நிலையத்தின் சிசிடிவி ஃபூட்டேஜ் கேட்டும் அவர்கள் ஏன் தர வில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவியே இல்லை எனக் கூறப்படுகிறது.
மர்ம மரணம்
உண்மையிலேயே அந்த இளம் நடிகை தூக்க கலக்கத்தில் தான் இடறி விழுந்து இறந்து போனாரா? அல்லது வேறு யாராவது தள்ளி விட்டார்களா? என்கிற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்த சம்மதித்த நிலையில், நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.