Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கம் ஆன் கப்பர் சிங்' ...3டியில் மீண்டும் வெளியாகிறது ஷோலே!
இந்தியத் திரையுலகின் எவர் கிரீன் ஆக்ஷன் க்ளாஸிக் படம் என போற்றப்படும் ஷோலே மீண்டும் புத்தம் புது வடிவில் வெளியாகிறது.
இந்த முறை டிஜிட்டல் மற்றும் 3டி தொழில் நுட்பத்தில் இந்தப் படம் வருகிறது.
இந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'.
5 ஆண்டுகள்
தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.
ஆர்டி பர்மன்
இசை மேதை ஆர்டி பர்மன் இசையில் 'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றன. இதன் டைட்டில் இசை மற்றும் பின்னணி இசை மட்டுமே தனி ரிக்கார்டாக வெளிவந்து விற்பனையல் சாதனை படைத்தது.
38 ஆண்டுகளுக்குப் பிறகு
கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில் நுட்பத்தில் 25 கோடி ரூபாய் செலவில் மெருகேற்றப்பட்டுள்ளது.
ஜனவரியில்
வரும் ஜனவரி மாதம் இத்திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடனும், நவீன 3-டி மற்றும் டி.ட்டி.எஸ். தொழில் நுட்பத்துடனும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
தனி விழா
விரைவில் மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் - நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
ஏற்கெனவே இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தார் ராம் கோபால் வர்மா. ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது.