Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்வேன்: கதறி அழுத சபீதா ராய்- வீடியோ இதோ
சென்னை: இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன் என நடிகை சபீதா ராய் தெரிவித்துள்ளார்.
வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் அந்த தொடரை ஒளிபரப்பும் நிறுவன மேலாளர் சுகுமாறனுடன் நள்ளிரவில் சண்டை போட்ட வீடியோ வெளியானது. சபீதா சுகுமாறனுடன் அவர் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில் இது குறித்து அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதில் சில,
சம்பவம்
அனைவருக்கும் வணக்கம். இதுவரைக்கும் நடந்த சம்பவத்தை பற்றியோ இல்லை அதை பற்றிய விளக்கங்கள் பற்றியோ எதை பற்றியும் நான் பேச வரவில்லை.
தெரியும்
நடந்த விஷயம் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த சம்பவத்தை அடுத்து நீ ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய எந்த சமூக வலைதளத்திற்கும் நீ போகக் கூடாது என்றார்கள் என் அம்மா.
அம்மா
ஏன் அம்மா அப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு போகக் கூடாது என்றால் போகக் கூடாது தான். நான் சமூக வலைதளத்திற்கு போகவில்லை என்றால் நடந்த சம்பவம் உண்மை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நடிகை
இது ஒரு சாதாரண பொண்ணுக்கு நடந்திருந்தால் யாரும் நியூஸ் போட்டிருக்க மாட்டாங்க. நான் ஒரு நடிகை என்பதால் நியூஸ் வந்துடுச்சு. என் அம்மாவுக்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் லைவில் வந்துள்ளேன்.
மானமுள்ள பெண்
ஒரு மானமுள்ள எந்த பெண்ணாக இருந்தாலும் அந்த செய்தி வெளியான அன்றே தற்கொலை செய்து செத்திருப்பாள். நீ ஏன் இன்னும் சாகலை என்று கேட்கிறீங்களா, சொல்கிறேன்.
குழந்தை
63 வயதில் அம்மா என்கிற குழந்தை என்னை நம்பி இருக்கிறார்கள். அவர்களை பார்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளேன். போடுற நியூஸுக்காக நான் செத்துவிட்டால் என் அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அதனால் நான் சாகவில்லை. தற்கொலைக்கு எதிரானவள் நான்.
வீடியோ
அந்த வீடியோவில் பார்த்தது நான் தான், சண்டை போட்டது நான் தான், அது நான் தான், அந்த வாய்ஸ் என்னுடையது தான். அந்த வீடியோவை சித்தரித்து போட்டுள்ள நியூஸ் நியாயமா, உண்மை சம்பவமாக தெரியுதா?
ஆதாரம்
இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன்.
வருங்கால கணவர்
என் வருங்கால கணவர் வெளிநாட்டில் உள்ளார். அவர் என்னை நம்புகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தார் நம்புவாங்களா? ஒரேயொரு சேனல் தான் செய்தி போட்டுள்ளது. அதை தான் நான் சொல்கிறேன்.
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் அந்த வீடியோவை எத்தனை பேர் ஷேர் செய்தீர்கள். அதன் உண்மையை தெரிஞ்சிருக்கலாமே. இப்ப இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க. சேனல் ஒன்று, இரண்டு நாள் போட்டுட்டு நிப்பாட்டிட்டான். ஆனால் சமூக வலைதளத்தில் வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.