Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஹீரோவானார் ஸ்ரீ!
மிஷ்கினின் லோன் வுல்ப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில், மிஷ்கின் அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரபஞ்சன் கூறுகையில், "இப்படத்தின் விளம்பரத்தை போலவே தலைப்பும் மிகவும் வித்தியாசமானது. படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை கூட்டுவதோடு, ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இந்தப் படம் பிரபலமாகிவிட்டது மிஷ்கின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பைக் காட்டுகிறது," என்றார்.
வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அடுத்து நடிக்கும் படம் இதுதான்.
இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "நான் கொடுத்து வைத்தவன்... முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணிபுரிவது என் பாக்கியமே. என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமானவையாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் நிறையவே கற்று வருகிறேன்," என்றார்.