Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஹீரோவானார் ஸ்ரீ!
மிஷ்கினின் லோன் வுல்ப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில், மிஷ்கின் அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரபஞ்சன் கூறுகையில், "இப்படத்தின் விளம்பரத்தை போலவே தலைப்பும் மிகவும் வித்தியாசமானது. படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை கூட்டுவதோடு, ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இந்தப் படம் பிரபலமாகிவிட்டது மிஷ்கின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பைக் காட்டுகிறது," என்றார்.
வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அடுத்து நடிக்கும் படம் இதுதான்.
இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "நான் கொடுத்து வைத்தவன்... முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணிபுரிவது என் பாக்கியமே. என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமானவையாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் நிறையவே கற்று வருகிறேன்," என்றார்.