Don't Miss!
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
ஸ்ரேயா சரண்.. புருஷனாவே இருந்தாலும்.. பப்ளிக்கா இப்படி பண்ணலாமா!
மும்பை: தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்
தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரன். தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா.
பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. இந்த, படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
வருடத்திற்கு ஒரு தமிழ் படம் என்பது போல நடித்து வந்தார் ஸ்ரேயா. தமிழில் இவருக்கு மிக பெரிய படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து உச்ச நடிகை என்று பெயர் பெற்றார். இதையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ரேயா.
கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. தற்போது அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஸ்ரேயா.
அந்த வரிசையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா, தமிழ் சினிமாவில் இவர் நடித்து பல வருடங்கள் ஆகி விட்டது, கடைசியாக இவரது நடிப்பில் தமிழில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் தொடர்ந்து நடிப்பாரா, பட வாய்ப்புகள் அவருக்கு வருகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் அடிக்கடி நியூ இயர் மற்றும் காதலர் தினம் போன்ற பல நாட்களில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தான் தற்போதும் இந்த புகைபடங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.