Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் மக்களை கேட்டுக் கொள்ளப்படும். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்களை தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம். விரைவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு குறும்படம் எடுக்க உள்ளோம்.
மேலும் நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகளை வைத்தும் குறும்படம் எடுக்க உள்ளோம் என்றார்.