Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன்
மும்பை : தன்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா டிவோர்ஸ் பெற்றது தனக்கு மகிழ்ச்சியையே கொடுத்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை தனித்தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மெல்லிசான டிரான்ஸ் பிரண்ட் புடவையில்… பக்காவாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார் !
தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவுடன் தனித்தனியாக தான் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மகள்கள்
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்வு கடந்த 2004ல் டிவோர்சுடன் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.
ஸ்ருதிஹாசன் வெளிப்படை
இந்நிலையில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதிஹாசன் இருவர் இணைந்து வாழ முடியாதபோது ஏதோ ஒரு காரணத்திற்காக இணைந்து இருப்பது தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தனியான பின்பு மிகவும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தோஷத்தை தரவில்லை
ஆனால் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்களால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களது வாழ்க்கையை தனியாக சிறப்பாக வாழ்ந்து வருவது குறித்து தான் மிகவும் உற்சாகமாக பீல் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்பான தந்தை
ஆயினும் சிறப்பான பெற்றோராக அவர்கள் இருவரும் தொடர்ந்து இருப்பதாகவும் குறிப்பாக தன்னுடைய தந்தை தன்னுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். தன்னுடைய தாயும் இதேபோல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷமாக உள்ளனர்
அவர்கள் இருவரும் தனித்தனியாக மிகவும் அற்புதமானவர்கள் என்றும் சேர்ந்து இருந்தபோது அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் சேர்ந்து வாழ்ந்த காலத்தை காட்டிலும் தற்போது அவர்கள் இருவரும் சந்தோஷமாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.