Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன்
மும்பை : தன்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா டிவோர்ஸ் பெற்றது தனக்கு மகிழ்ச்சியையே கொடுத்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை தனித்தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மெல்லிசான டிரான்ஸ் பிரண்ட் புடவையில்… பக்காவாக போஸ் கொடுத்த ஸ்ரீதேவி விஜயகுமார் !
தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவுடன் தனித்தனியாக தான் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மகள்கள்
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்வு கடந்த 2004ல் டிவோர்சுடன் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.
ஸ்ருதிஹாசன் வெளிப்படை
இந்நிலையில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதிஹாசன் இருவர் இணைந்து வாழ முடியாதபோது ஏதோ ஒரு காரணத்திற்காக இணைந்து இருப்பது தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தனியான பின்பு மிகவும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தோஷத்தை தரவில்லை
ஆனால் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்களால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களது வாழ்க்கையை தனியாக சிறப்பாக வாழ்ந்து வருவது குறித்து தான் மிகவும் உற்சாகமாக பீல் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்பான தந்தை
ஆயினும் சிறப்பான பெற்றோராக அவர்கள் இருவரும் தொடர்ந்து இருப்பதாகவும் குறிப்பாக தன்னுடைய தந்தை தன்னுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். தன்னுடைய தாயும் இதேபோல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷமாக உள்ளனர்
அவர்கள் இருவரும் தனித்தனியாக மிகவும் அற்புதமானவர்கள் என்றும் சேர்ந்து இருந்தபோது அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் சேர்ந்து வாழ்ந்த காலத்தை காட்டிலும் தற்போது அவர்கள் இருவரும் சந்தோஷமாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.