Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி: ஸ்ருதி
மும்பை: தன் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியவரை கைது செய்த போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி காலை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஸ்ருதி ஹாஸன் வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் அவரின் கழுத்தை நெறித்து தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஸ்ருதி கடந்த 21ம் தேதி இரவு போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் விரைந்து செயல்பட்ட போலீசார் நேற்று அந்த நபரை கைது செய்தனர். அசோக் த்ரிமுகே(32) என்னும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில்,
நான் ஸ்ருதி தங்கியிருக்கும் வீட்டில் உள்ள காவலாளிகள் வைத்திருக்கும் பதிவேட்டில் எனது பெயரை எழுதிவிட்டு தான் அவரது வீட்டுக்கு சென்றேன். எனது சகோதரருக்கு வேலை கேட்டு சென்றேன். அவரை தாக்கும் எண்ணத்தில் செல்லவில்லை. அவர் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்திவிட்டார் என்றார்.
அசோக் பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசோக்கை கைது செய்த மும்பை போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.