Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் சூர்யாவுடன் இணைகிறாரா ஸ்ருதி?
இயக்குனர் வெங்கட் பிரபுவின் படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை இயக்குநர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் லக் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் லக் அவருக்கு லக்கியாக இல்லை. தமிழில் அவர் அறிமுகமான ஏழாம் அறிவு அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா-ஸ்ருதி ஜோடியும் நல்ல ஜோடியாக இருக்கிறது என்று பேசப்பட்டது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் ஸ்ருதி ஜோடி சேர்வதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து வெங்கட் பிரபுவிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
மங்காத்தா வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் தல அஜீத்தை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கேட்கின்றனர். அவரை வைத்து படம் எடுக்க ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு நாளாகும்.
தற்போது சூர்யா நடிக்கும் ஆக்ஷன், த்ரில்லர் படத்தை இயக்குகிறேன். இதில் தெலுங்கு ஹீரோ ரவி தேஜாவும் நடிக்கிறார். தற்போது சூர்யாவும், ரவி தேஜாவும் வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.
அந்த படங்களை முடித்த பிறகு இந்த படப்பிடிப்புக்கு வருவார்கள். முன்னணி நடிகை ஒருவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அது ஸ்ருதி தானே என்று பலர் கேட்கின்றனர். சூர்யா-ஸ்ருதி எனது படத்தில் ஜோடி சேர்வதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி தான் என்றார்.