Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்ருதிக்கு தொழில் முக்கியம்... என்னுடன் தங்கமாட்டார்! - சரிகா
மும்பை: சமீபத்திய தாக்குதல் காரணமாக ஸ்ருதி என்னுடன் வந்து தங்க மாட்டார். நானும் அப்படிச் சொல்ல மாட்டேன். அவருக்கு தொழில்தான் முக்கியம் என்றார் ஸ்ருதியின் அம்மா சரிகா.
மும்பை வீட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் தாக்கப்பட்டது அவரது தாய் சரிகாவுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.
தாக்குதல்
மும்பையில் தாய் சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோர் இருந்தாலும், பாந்தராவில் உள்ள அந்த அபார்ட்மென்டில் ஸ்ருதிஹாசன் தனியாகத்தான் வசித்தார்.
மர்ம நபர் கதவை தட்டியதும் திறந்தார். அப்போதுதான் அந்தத் தாக்குதல் நடந்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சியானார்கள். இந்தத் தாக்குதல் குறித்து முதல் நான்கு தினங்கள் மவுனம் காத்த ஸ்ருதி, பிறகுதான் போலீசுக்குப் போனார்.
கமல்
மகளுக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து கமல் கவலை தெரிவித்ததோடு, கூடுதல் கவனத்தோடு இருக்குமாறு ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்தார்.
சரிகா கருத்து
ஸ்ருதியின் தாயான சரிகா, இச்சம்பவம் குறித்து கூறுகையில், "ஸ்ருதி மீது நடந்த தாக்குதல் எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது. ஸ்ருதி இப்போது நன்றாக இருக்கிறார். எது நடக்ககூடாதோ அது எதிர்பாராமல் நடந்துவிட்டது. இது மாதிரியான நிலைமைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என இந்த நிகழ்ச்சி கற்றுக் கொடுத்துவிட்டது.
என்னுடன் தங்க மாட்டார்
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இந்த தாக்குதலால் ஸ்ருதிஹாசன் இனிமேல் என்னுடன் வந்து தங்கி இருப்பாரா? என்று கேட்கிறார்கள். இல்லை... ஸ்ருதி என்னுடன் தங்க மாட்டார்.
நச்சரிக்கக் கூடாது
ஸ்ருதிக்கு அவரது தொழில் முக்கியம். படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பிள்ளைகள் வளர்ந்ததும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தலாம். ஆனால் நம் பிடிக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. தேவையில்லாமல் நச்சரிக்கக் கூடாது!" என்றார்.