Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொடரும் கொரோனா தொற்று பீதி.. தனது காதல் திருமணத்தை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்த பிரபல நடிகை!
சென்னை: கொரோனா தொடர்ந்து பரவி வருவதை அடுத்து, தனது திருமணத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார், பிரபல நடிகை.
தமிழில், துஷ்யந்த் ஜோடியாக மச்சி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுபா புஞ்சா.
இந்த படம், கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்து 'திருடிய இதயத்தை' படத்தில் நடித்தார்.
செம ஸ்டைலில் பிரியா பவானி சங்கர்.. லட்சம் பூப்பறிச்சு, மிச்சம் தேன்தெளிச்சு.. வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சொந்த மொழி
தொடர்ந்து, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் படங்களில் நடித்த சுபாவுக்கு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, சொந்த மொழியான கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு வரவேற்பு கிடைத்தது. முன்னணி கன்னட ஹீரோக்களுடன் நடித்தார்.
வெளியிட்டு இருந்தார்
கடந்த சில வருடங்களாக அங்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் கடந்த ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராமில் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருந்தார். அது அவர் திருமணத் தகவல்.
சுமந்த் பில்லவா
அதில், தனது காதலரும் தொழிலதிபருமான சுமந்த் பில்லவா (sumanth billava) என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். 'நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் சுமந்த் பில்லவா பற்றி பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் காதலித்து வருகிறோம்
திருமணம் நடக்கும்
ஊரடங்கு முடிந்ததும் டிசம்பர் மாதம் எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தார். தனது காதலருடன் எடுத்துக்கொண்ட சில புகைப் படங்களையும் பகிர்ந்திருந்தார். 'சினிமா துறையில் இல்லாத ஒருவர், எனக்கு கணவராக வர வேண்டும் என்று நினைத்தேன். அதே போல இவர் கிடைத்தார் என்று அவர் கூறியிருந்தார்.
தொற்று காலத்தில்
இந்நிலையில், கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை என்பதால் தனது திருமணத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக சுபா புஞ்சா கூறியுள்ளார். 'திருமணத்துக்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்துள்ளோம். இந்த தொற்று காலத்தில் சாத்தியமில்லை என்பதால் தள்ளி வைத்துள்ளோம். தேதி இன்னும் முடிவாகவில்லை என்று அவர் கூறியுள்ளார்.