Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
என் மகள் நடிகையாக வேண்டாம்: சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்
மும்பை: தனது மகள் நவ்யா நடிகையாவதை விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதாவின் மகள் நவ்யா நவேலி நந்தா ஏற்கனவே பிரபலம். லண்டனில் படிக்கும் நவ்யா விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
நவ்யா நடிகையாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா மும்பையில் நடந்த ஐஸ்வர்யா தனுஷின் புத்தக வெளியீட்டு விழாவில் கூறுகையில்,
நவ்யா
என் மகள் நடிகையாக வேண்டும் என்று கூறினால் நான் கவலைப்படுவேன். ஏனென்றால் நடிகையாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். அதிலும் பெண்ணாக இருந்தால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
தோல்விகள்
திரையுலகில் நிறைய தோல்விகள் உள்ளது. அது யார் கண்ணுக்கும் தெரிவது இல்லை. படத்திற்காக நடிப்பதை மக்கள் பொது இடத்தில் விமர்சிப்பார்கள்.
ஜெயா பச்சன்
நடிகையாக என் அம்மா ஜெயா போன்று முறையாக தயாராக வேண்டும். என் தந்தை போன்று தடுமாறக் கூடாது. என் அம்மா தான் அவர்கள் வீட்டில் மூத்த பெண். படித்து முடித்த பிறகு நடிகையாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரின் தந்தையிடம் தெரிவித்தார்.
நடிப்பு
என் அம்மா நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பில் கற்றுத் தேர்ந்தார். இது தான் நடிகையாக முறையாக செய்ய வேண்டியது. நடிக்க வந்தவுடனே புகழும், பணமும் வந்துவிடாது.