Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி, காக்கா முட்டை.... தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போகிறது!- ஷ்யாம் பெனகல்
பாகுபலி, காக்கா முட்டை போன்ற படங்களைப் பார்க்கும்போது, தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போவதாக உணர்கிறேன், என்று பாராட்டு தெரிவித்துள்ளார் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷ்யாம் பெனகல்.
கொச்சியில் நடந்த ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர் கூறுகையில், "ஒரு கட்டத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தியப் படங்களுக்கு இடமே இல்லை என்ற நிலை உருவாவிட்டது. உலகளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒரு இந்தியப் படமாவது இடம் பெறுமா என்ற கேள்வி இருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலையை மாற்றிவிட்டன தென்னிந்திய மொழிப் படங்கள். சர்வதேச சந்தையை குறிவைத்து வெளியாகின்றன. நல்ல வசூலையும் பெறுகின்றன.
பாகுபலி, காக்கா முட்டை போன்ற படங்களைப் பார்த்தபோது, தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போவதை உணர முடிந்தது.
இந்தியாவில் திரைப்பட விழா கலாச்சாரம் இன்னும் அதிகமாக வேண்டும். நம் நாட்டில் தயாராகும் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதைத் தாண்டிய உலக சினிமா தெரியாமல் போய்விடும். சர்வதேசப் படங்களைப் பார்த்தால்தான், நமது சினிமா கலைஞர்களின் பார்வை விரிவடையும்," என்றார்.