ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் ஷ்யாம் சிங்கா ராய்'!
புதுடெல்லி: நானி மற்றும் சாய் பல்லவியின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஷ்யாம் சிங்கா ராய் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.
Recommended Video
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் வெங்கட் போயன பள்ளியால் பிரமாண்ட பட்ஜெட்டில் ஷியாம் சிங்க ராய் படம் உருவாக்கப்பட்டது.
தேசிய விருது பெற்ற க்ருதி மகேஷ் மற்றும் யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தனர்.

ஷ்யாம் சிங்கா ராய்
ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென் மொழிகளிலும் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியானது.

முன் ஜென்ம கதை
ஷ்யாம் சிங்கா ராய் முன் ஜென்ம கதைதான் என்றாலும் அதில் இழையோடும் காதல் கதை நெஞ்சை வருடுகிறது. பிற்பாதியில் கொல்கொத்தாவில் புரட்சிகர எழுத்தாளராக வரும் நானியின் வாழ்க்கையில் நடந்தது இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். நடிப்பைப் பாராட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்ற அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 47 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில்
இந்நிலையில், நானி மற்றும் சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் periodic film, background score and classical cultural dance Indie film ஆகிய மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் போட்டியிடுகிறது. நானியின் காவியமான காதல் கதை, கொரோனா காலத்தில் திரையரங்கில் வெளியான போதும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

'தசரா'
தெலுங்கில் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெமினி டிவியும் , தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் வாங்கியது. நானி, சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நானி தற்போது 'தசரா' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார், இது தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழமையான காதல் கதை ஆகும்.


Click it and Unblock the Notifications











