Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை!
சென்னை: வருடந்தோறும் பொங்கலை முன்னிட்டு ஷியாம் & சூர்யா ஆகியோரின் கச்சேரி நடக்கும்.
இந்த லாக்டௌனிலும் virtual முறையில் இசை கச்சேரிகள் நடத்தி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
அது குறித்தும், பொங்கல் ஸ்பெஷல் கச்சேரியையும் நேர்காணலில் நமக்கு தந்து அசத்தியுள்ளனர்.
பாரம்பரிய இசை
பொங்கலுக்கு அனைவருக்கும் விருப்பமான பாடலென்றால் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் இருந்து "பொங்கலோ பொங்கல்" பாடல் தான். அதற்கு அசத்தலாக டியூன் போட்டு ரசிகர்களுக்கு நினைவுகளை மூட்டியுள்ளனர் ஷியாம் & சூர்யா.
பிரபலமான பாடல்
பின்னர் துள்ளலான இசையை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் மீண்டும் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து "அண்ணாத்த ஆடுறார்" பாடலின் டியூனை அற்புதமாக போட்டு பார்வையாளர்களை குஷி படுத்தியுள்ளனர்.
குட்டி ஸ்டோரி
இரண்டு கமல் பாடல்களை தொடர்ந்து பிற ரசிகர்களையும் கவரும் வகையில் நேர்காணலில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் தளபதி விஜய் நடிப்பில் இருந்து "குட்டி ஸ்டோரி" பாடலின் ட்யூனை இசைத்து அசத்தினர் ஷியாம் & சூர்யா.
கொரோனாவிலும் வயலின்
கொரோனா தொற்றினால் லாக் டௌன் தொடங்கிய போது தினமும் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து நாட்களை கடத்தியதாகவும், பின்னர் தனக்கு கொரோனா வந்த போதும் தொடர்ந்து வயலின் வாசித்ததாகவும் நேர்காணலில் கூறியுள்ளார் ஷியாம்.