Don't Miss!
- News மைக் சின்னத்திலேயே போட்டி! பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கேட்டது கிடைத்திருக்கும்! சீமான் காட்டம்
- Technology நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV.. மெட்டல் டிசைன், 20W ஸ்பீக்கர்ஸ் வேற!
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Finance மதுரை ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பெங்களூர் நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Automobiles ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கோம்.. உதவி கமிஷனர் பெயரைச் சொல்லி.. சினிமா இயக்குனரிடம் மோசடி!
சென்னை: சினிமா இயக்குனரிடம் உதவி கமிஷனர் பெயரில் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒய்.ஜி.மகேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் நடித்த மலையாள படம், ஷியாமா ராகம்.
இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இதை சேது இயாள் என்ற மலையாள இயக்குனர் இயக்கி இருந்தார்.
சந்தோஷ்சிவன் இயக்குகிறார்.. இந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் இயக்குனரின் முதல் படம்.. இவர்தான் ஹீரோ!
இயக்குநர் லோகிததாஸ்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சேது. மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் லோகிததாஸிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவருடைய நெருங்கிய நண்பர் ஜூலியஸ் சீசர். சென்னையில் உதவி போலீஸ் கமிஷனராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவு சேதுவின் செல்போன் மெசெஞ்சரில் ஒரு செய்தி வந்துள்ளது.
மருத்துவமனையில்
அதை சென்னையில் உள்ள ஜூலியஸ் சீசர் அனுப்பி இருந்தார். அந்த தகவலில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடவே, போன்-பே கணக்கு விவரமும் கொடுக்கப் பட்டிருந்தது.
பணத்தை அனுப்பினார்
உடனே சேது, போன்-பே கணக்கில் பணத்தை அனுப்பினார். பிறகு பணம் கிடைத்து விட்டதாக செய்தி வந்தது. இதையடுத்து சேது, மெசெஞ்சர் கால் மூலம் ஜூலியஸ் சீசரை தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்கவில்லை. விரைவில் அழைக்கிறேன் என்ற செய்தி மட்டும் வந்தது.
சந்தேகம் அடைந்தார்
இந்நிலையில் மீண்டும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு தகவல் வந்தது. திருப்பி அழைத்தபோது போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சேது, ஜூலியஸ் சீசரின் செல்போன் எண்ணில் அழைத்தார். போனை எடுத்தவர், தான் பணம் கேட்டு எந்த தகவலும் அனுப்ப வில்லையே என்றார்.
ஆன்-லைன் மோசடி
இதனால் சேது அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் அவர் பெயரில் மோசடி நடந்திருப்பது சேதுவுக்கு தெரிய வந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து இந்த மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற ஆன்-லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்த மோசடி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சுந்தர் சி -வடிவேலு பிரிய சந்தானம்தான் காரணமா?.. இது என்ன புது பஞ்சாயத்து.. இப்படியும் நடந்திருக்கா?
-
Pandian stores 2: பொண்ணுங்களுக்கு அமைதியான ஆண்களையும் பிடிக்கும்.. சரவணனுக்கு ராஜி சொன்ன விஷயம்!
-
OTT: அடேங்கப்பா.. ஹனுமான், மஞ்சுமெல் பாய்ஸ் ஒரே நாளில் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?.. எப்போ?