Don't Miss!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரிய ஞானவேல்ராஜா மனு தள்ளுபடி
சென்னை: சிங்கம் 3 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியான அன்றே அதை லைவ் ஸ்ட்ரீமில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சவால் விட்டுள்ளது.
இந்நிலையில் ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
சிங்கம் 3 படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா இது நீதிப்பேராண்மை வழக்காக விசாரிக்க ஏற்றது இல்லை என்றார். மேலும் இதை உரிமையியல் வழக்காக தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.