Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிசாசு 2 படத்திற்காக சித் ஸ்ரீராம் பாடிய மொலோடி..வியந்து பாராட்டிய மிஷ்கின்!
சென்னை: ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ராக் ஃபோர்ட் என்டேர்டைன்மெண்ட் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் பதிவு குறித்து மிஷ்கின் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
'குடும்பத்தோட தியேட்டருக்கு வாங்க.. சினிமா இல்லாம வாழ்க்கை முழுமை பெறாது..' மாஸ்டர் பற்றி மிஷ்கின்
பிரபல பாடகர்
சித் ஸ்ரீராம் பாடல்கள் பாடுவது மட்டுமன்றி சில படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். பாடிய பாடல்களும் ஹிட் அடிக்க தவறியதில்லை.
மிஷ்கின் இயக்கத்தில்
கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் உன்ன நினைச்சு, நீங்க முடியுமா என இரண்டு பாடல்களை பாடி இருந்தார். இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடலாகும்.
பாராட்டிய மிஷ்கின்
இதை தொடர்ந்து மிஷ்கினுடன் மீண்டும் இணைந்துள்ளார் சித் ஸ்ரீராம். பிசாசு 2 படத்திற்காக மெலோடி பாடலை பாடிய சித் ஸ்ரீராமை மிஷ்கின் வியந்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
முழு வீச்சில் படப்பிடிப்பு
பிசாசு 2 படத்தின் பாடல்கள் பதிவு வேலைகள் ஏற குறைய முடியும் நிலையில் உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.