Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?
Recommended Video
திருவனந்தபுரம் : 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் பயங்கர பிரபலமாகிவிட்டார்.
'ஒரு அடார் லவ்' திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலைகளும் நடக்கிறதாம்.
இந்நிலையில, பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து எடுத்த செல்ஃபி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், தான் மலையாளத்தில் நடித்துள்ள முதல் படமான 'கம்மார சம்பவம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த். அப்போது யதார்த்தமாக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Wink Wink :) pic.twitter.com/MZDvWmXx0D
— Siddharth (@Actor_Siddharth) April 5, 2018
சித்தார்த், தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு மலையாளப் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்டது நியாயமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.