சங்-கீ.. கிரண் பேடியை கலாய்த்து டிவீட் போட்ட நடிகர் சித்தார்த்!
சென்னை : புதுவை ஆளுனர் கிரண் பேடியை நடிகர் சித்தார்த் கலாய்ந்து சங்-கீ என்று பதிவிட்டுள்ளார். இதில் அவரை மறைமுகமாக சங்கி என்றும் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தலங்களில் தனது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதை தாண்டி நேரடியாகவும் பல அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

அண்மையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி அவர்களை விமர்சனம் செய்து ட்விட்டர் போட்டு இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் முதல் ஆளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் நாசா வெளியிட்டதாக கூறி ஒரு பொய் தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை புதுச்சேரி ஆளுனரான கிரண் பேடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இதை கண்ட நடிகர் சித்தார்த் அந்த ட்விட்டை ரீட்விட் செய்து சங்-கீ ப்ரெம் வாட்சாப் என்று பதிவிட்டுள்ளார். மறைமுகமாக ஆளுனரை சங்கி என்றும் கலாய்த்து இருக்கிறார் .

நடிகர் சித்தார்த் பதிவிட்ட இந்த ட்விட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் எதை பற்றி கவலை கொள்ளாமல் அவருக்கு பிடித்த முறையில் தனது சமூக வலைத்தளத்தில் செயல் பட்டுவருகிறார். இது பலரால் பாராட்டபட்டும் வருகிறது .
நடிகர் சித்தார்த் தற்போது சைதான் கீ பச்சா, இந்தியன் 2 மற்றும் டக்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களை தாண்டி ஹிந்தியில் லைலா எனும் இணைய தொடரிலும் நடித்து அசத்தி இருந்தார் சித்தார்த் .
சித்தார்த் நடிப்பை தாண்டி சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது பலரிடம் பாராட்டை பெற்று தந்துள்ளது. அவர் எடுத்திருக்கும் இந்த முடிவினால் சினிமாவை தாண்டி அரசியலுக்கு வருவாரா அல்லது சினிமாவில் இருந்தே தான் பேசும் அரசியலை தொடர்ந்து பேசுவாரா என்பதனை பொருத்திருந்து பார்போம்.


Click it and Unblock the Notifications











