Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
SIIMA விருதுகள் 2016: ஸ்ரீமந்துடு vs பாகுபலி... விருதுகளை அள்ளப் போவது யார்?
ஹைதாராபாத்: தென்னிந்திய SIIMA (2016) விருதுகள் விழா வருகின்ற ஜூலை 1 ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் ஒன்று கூடும் விழா என்பதால், ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இந்த விழாவுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் இந்த விழாவுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராணா டகுபதி, பிரணிதா, அமைரா தஸ்தூர், ஹுமா குரோஷி, பிரக்யா ஜெயஸ்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு படவுலகைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்த பாகுபலி மற்றும் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஸ்ரீமந்துடு 2 படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர் உட்பட 11 பிரிவுகளில் பாகுபலியும், சிறந்த நடிகர் உட்பட மொத்தம் 8 பிரிவுகளில் ஸ்ரீமந்துடுவும் மோதுகின்றன. இதில் பாகுபலி அதிக விருதுகளை வெல்லக்கூடும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது.
அதே நேரம் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ரீமந்துடுவில் சமுதாய அக்கறையும் கலந்திருப்பதால், இந்தப் படம் பாகுபலிக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எந்தப் படம் அதிக விருதுகளை வெல்லப் போகிறது என்பதை அறிய ஜூலை 1 வரை காத்திருக்கலாம்.