Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோடிக்கணக்கில் செலவில் நடந்த தீபிகா -ரன்வீர் திருமணம் செல்லாதாமே.. கிளம்பும் புது சர்ச்சை!
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணத்திற்கு இத்தாலியை சேர்ந்த சீக்கிய அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு, நடத்தப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் செல்லாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த வாரம் இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இவர்களது ரிசப்ஷன் பெங்களூருவில் நடைபெற்றது.
இதோடு அவர்களது திருமணக் கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. மும்பையில் மூன்று கட்டமாக ரிசப்ஷன் நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் ரிசப்ஷனில் பாலிவுட் உலகமே பங்கேற்க இருக்கிறது. அதற்கு முன் நடக்க இருக்கும் இரண்டு ரிசப்ஷனிலும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தாளிகள் பங்கேற்கின்றனர்.
இப்படியாக உலகமே வியக்கும் அளவிற்கு ஆடம்பரமாக நடந்துள்ள அவர்களது திருமணம் செல்லாது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
காரணம் தீபிகா பெங்களூரை சேர்ந்த கொங்கணி சமூகத்தை சேர்ந்தவர். ரன்வீர் பஞ்சாப் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். சீக்கிய மதப்படி குருத்துவாராவில் தான் திருமணம் நடைபெற வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தக்கூடாது. ஆனால், ரன்வீரின் திருமணம் அப்படி நடைபெறவில்லை.
இதற்கு சீக்கிய மத குரு சுக்தேவ் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவில் அவர் குருத்வாரா கமிட்டியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார். 'அதன்பின்னர், ஐந்து சீக்கிய குருமார்கள் சேர்ந்து இதில் முடிவு எடுப்பார்கள். அப்போது தான் இவர்களது திருமணம் செல்லுமா என்பது குறித்து தெரிய வரும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய சர்ச்சையால் தீபிகா, ரன்வீர் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.