Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நேத்து ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா? 'ஈஸ்வரன்' டப்பிங்கை முடித்த சிம்பு
சென்னை: ஈஸ்வரன் படத்தின் டப்பிங்கையும் முடித்துவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு இப்போது நடிக்கும் படம், ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.
நிதி அகர்வால்
கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.
உடல் எடை
இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார், சிம்பு.
ஒரு கிராம் தங்கம்
அதாவது தீபாவளி பரிசாக, ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும், தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி இருக்கிறார். சிம்புவின் இந்தத் திடீர் பரிசால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
டப்பிங்கை முடித்தார்
ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்தார் சிம்பு. அதையும் முடித்துவிட்டதாக நடிகர் சிம்பு இப்போது தெரிவித்துள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.