Don't Miss!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாநாடு டப்பிங் ஆரம்பம்.. எல்லாம் கடவுள் அருள் என தயாரிப்பாளர் ட்வீட்.. ஆனா சிம்புவை காணோமே?
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், இன்று சிறிய பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கின.
Recommended Video
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளன என்கிற அறிவிப்புடன் வெளியான போட்டோக்களில் நடிகர் சிம்பு இல்லாததால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகி உள்ளனர்.
சிம்புவின் மாநாடு
இயக்குநர் வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் எனும் பெயரில் உருவாகி வரும் சிம்புவின் மாநாடு திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில், சமீபத்தில் தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
மாநாடு டப்பிங் ஆரம்பம்
மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் ஆரம்பம் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்டு சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டப்பிங் கலைஞர்கள் அந்த போட்டோக்களில் இடம்பெற்றிருந்தனர்.
கடவுள் அருளால்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் மற்ற பணிகளுக்கும் இதுவரை எந்தவொரு தடையும் அமலாகவில்லை. இந்நிலையில், கடவுள் அருளால் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டன என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்டுள்ளார்.
சிம்பு இல்லை
மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி விட்டதாக போட்டோக்கள் வெளியான நிலையில், நடிகர் சிம்புவை எங்கே காணவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் தனது போர்ஷனை நடிகர் சிம்பு ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.