சப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா
சென்னை: நடிகை ஷகீலாவின் மானத்தை காப்பாற்றியிருக்கிறார் சில்க் ஸ்மிதா.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இருந்து பல நடிகர்கள், நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அதில் ஷகீலா கதாபாத்திரத்தில் ரிச்சா சட்டா நடிக்கிறார். அண்மையில் அவர் ஷகீலாவை சந்தித்து பேசியுள்ளாார்.
இந்த படத்திற்காக ரிச்சா மலையாளம் கற்றுள்ளார். ஷகீலா நடித்த முதல் படத்தில் அவர் சில்க் ஸ்மிதாவின் தங்கையாக வந்தார். அந்த படத்திற்காக வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை சில்க் கன்னத்தில் அறையும் காட்சியை படமாக்கியபோது சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

சில்க் ஷகீலாவை அறைவது போன்று நடிக்காமல் நிஜமாகவே ஓங்கி அறைந்துவிட்டார். அவர் அடித்த வேகத்தில் ஷகீலா அழுதுவிட்டார். தன் மீது இருக்கும் கடுப்பில் அவர் அறைந்ததாக முதலில் ஷகீலா நினைத்தார்.
அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு சில்க் ஷகீலாவை அழைத்து தான் ஓங்கி அறைந்ததற்கான காரணத்தை கூறினார். அந்த காட்சி சரியாக வரவில்லை என்றால் பலமுறை ரீடேக் எடுப்பார்கள், நீ ரொம்ப நேரம் துண்டுடன் நின்றிருக்க வேண்டும். அதனால் தான் ஒரே டேக்கில் ஓகே செய்ய அப்படி சப்பென்று அறைந்தேன் என்று சில்க் கூறியதை கேட்டு ஷகீலா நெகிழ்ந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











