Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பீப் சாங் சர்ச்சைக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு - அனிருத்!
சென்னை : சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்திற்குப் பிறகு 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார்.
'சர்வர் சுந்தரம்' ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள 'ஓடி ஓடி உழைக்கனும்', 'சக்க போடு போடு ராஜா' பட வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இதில் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சிம்பு - அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு.
சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. சிம்புவின் ரசிகர்களும், அனிருத் ரசிகர்களும் இந்தப் பாடலைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.